பாலிவுட்டின் கஷ்ட காலத்தை ஷாருக்கானின் ‘பதான்’ போக்கும் - பிருத்விராஜ் நம்பிக்கை

By செய்திப்பிரிவு

'பாலிவுட் திரையுலகில் ஏற்பட்டுள்ள மந்தமான போக்கிற்கு ஷாருக்கானின் ‘பதான்’ திரைப்படம் முடிவுகட்டும்’ என மலையாள நடிகர் பிருத்விராஜ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் ‘சலார்’ படத்தில் பிருத்விராஜ் நடித்து வருகிறார். இதையடுத்து, அக்‌ஷய் குமார்- டைகர் ஷெராப்பின் ‘படே மியான் சோட்டே மியான்’ படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்திலும் நடிக்கிறார். ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பாலிவுட்டுக்கு திரும்புகிறார் பிருத்விராஜ்.

இந்நிலையில் அண்மையில் ஃபிலிம் கம்பெனியன் சேனலுக்கு பிருத்விராஜ் அளித்த பேட்டியில், “ஒருநேரத்தில் நாம் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து ‘அவர்கள் (பாலிவுட்) எப்படி இதை செய்கிறார்கள்? அவர்களால் எப்படி சர்வதேச சந்தையை உருவாக்க முடிகிறது என்று பேசிக்கொண்டிருந்தோம். அதுவும் நீண்ட நாட்களுக்கு முன்பெல்லாம் இல்லை. எனவே, இது ஒரு கட்டம் என்று நான் நம்புகிறேன். ஒரு பெரிய வெற்றி இருக்கிறது.

அது ஒருவேளை ஷாருக்கானின் ‘பதான்’ ஆக இருக்கலாம். சில புதிய படங்கள் தற்போது படமாக்கப்பட்டு வருகின்றன. பதான் ஒரு முக்கியமான படமாக இருக்கலாம். அதைத்தொடர்ந்து வெளியாகும் பெரிய படங்கள் மூலம் அதன் மொத்த நிலைமையும் மாறும்” என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE