விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி உட்பட பலர் நடித்துள்ள படம் ‘கட்டா குஸ்தி’. செல்லா அய்யாவு இயக்கியுள்ள இந்தப் படம் வெள்ளிக்கிழமை வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
இப்படம் பற்றி ஐஸ்வர்யா லட்சுமி கூறும்போது, “முதலில் இந்த தலைப்பைக் கேட்டதும் எனக்குப் புரியவில்லை. என் கேரக்டரை இயக்குநர் விளக்கிய பிறகு புரிந்துகொண்டேன். இதில் மலையாளப் பெண்ணாக நடித்திருக்கிறேன். கணவன் - மனைவி இடையே உள்ள பிரச்சினை பற்றிய கதை இது. இப்போது தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் நடித்து வருகிறேன்.
நடிகர், நடிகைகளுக்கு மொழி ஒரு பிரச்சினையில்லை. இப்போது துல்கர் சல்மானுடன் ‘கிங் ஆப் கோதா’, மம்மூட்டியுடன் ‘கிறிஸ்டோபர்’ படங்களில் நடித்துள்ளேன். சிறு வயதில் இருந்தே மம்மூட்டியை பிடிக்கும். அவருடன் நடிக்க வேண்டும் என்பது கனவு. இவ்வாறு ஐஸ்வர்யா லட்சுமி கூறினார்.