‘கே.ஜி.எஃப்’, ‘கே.ஜி.எஃப் 2’ படங்களின் மூலம் இந்தியா முழுவதும் ரசிகர்களைப் பெற்றவர், கன்னட நடிகர் யாஷ். இந்தப் படத்துக்குப் பிறகு அவருக்குப் பல வாய்ப்புகள் வந்துள்ளன.
இதற்கிடையே, ரன்பீர் கபூர், ஆலியா பட் நடிப்பில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற ‘பிரம்மாஸ்திரா’ படத்தின் அடுத்த பாகம் உருவாகி வருகிறது. இதில் முக்கிய வேடத்தில் நடிக்க, ஹிர்த்திக் ரோஷன், ரன்வீர் சிங் ஆகியோரிடம் இயக்குநர் அயன் முகர்ஜி பேசி வந்தார். அவர்கள் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் நடிகர் யாஷிடம் பேசி வந்தனர். தயாரிப்பாளர் கரண் ஜோஹரும் பேச்சுவார்த்தை நடத்தினார். 2 முறை அவர்கள் சந்தித்துப் பேசியும், யாஷ் நடிக்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.