'ஏறுமயிலேறி' - கார்த்தி குரலில் வெளியானது ‘சர்தார்’ முதல் சிங்கிள் பாடல்

By செய்திப்பிரிவு

சென்னை: நடிகர் கார்த்தி பின்னணிப் பாடகராக பாடியுள்ள 'ஏறுமயிலேறி' சர்தார் படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகி உள்ளது. இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்தப் பாடலை யுகபாரதி எழுதி உள்ளார். இந்தப் படம் வரும் தீபாவளி திருநாளை முன்னிட்டு வெளிவர உள்ளது.

பி.எஸ்.மித்ரன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். பிரின்ஸ் பிக்சர் பேனரில் எஸ்.லக்‌ஷ்மன் குமார் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். இதில் இரட்டை வேடத்தில் கார்த்தி நடித்துள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது. ராஷி கண்ணா, ஷங்கி பாண்டே, லைலா, முனீஷ்காந்த், முரளி சர்மா, இளவரசு ஆகிய நடிகர்கள் இதில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை கைப்பற்றியுள்ளது உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவிஸ். படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி உள்ளது.

இப்போது இந்தப் படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகி உள்ளது. சுமார் 4.17 நிமிடங்கள் ரன் டைம் கொண்டுள்ளது இந்தப் பாடல். படத்தில் மேடையில் பாடும் பாடலாக இது இடம்பெற்றிருக்கும் எனத் தெரிகிறது. நடன இயக்குநர் ஷோபி இந்தப் பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார்.

பாடல் வீடியோ லிங்க்..

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE