கதை, திரைக்கதை எழுதி நாயகனாக நடிக்கும் யோகிபாபு

By செய்திப்பிரிவு

நகைச்சுவை நடிகர் யோகிபாபு கதை, திரைக்கதை, வசனம் எழுதி நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கடந்த 2009-ம் ஆண்டு வெளியான 'யோகி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர் நடிகர் யோகிபாபு. நகைச்சுவை, குணச்சித்திர கதாபாத்திரங்களைத் தாண்டி நாயகனாகவும் சில படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், அவர் தற்போது புதிய படம் ஒன்றிற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். அத்துடன் படத்தின் நாயகனாகவும் நடிக்கிறார்.

2016-ம் ஆண்டு வெளியான 'வில் அம்பு' படத்தை இயக்கிய ரமேஷ் சுப்ரமணியன் இப்படத்தை இயக்குகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் பூஜை நேற்று நடந்தது. படப்பிடிப்பு விரைவில் நடைபெற உள்ளது. 'பொம்மை நாயகி', 'பூமர் அங்கிள்' போன்ற யோகிபாபு நாயகனாக நடிக்கும் படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE