திரைத்துறை துளிகள் | ‘ஆயிரத்தில் ஒருவன்’ - செல்வராகவன் ஆதங்கம்

By செய்திப்பிரிவு

> “நான் இயக்கிய ‘ஆயிரத்தில் ஒருவன்’ வெளியானபோதே கொண்டாடப்பட்டிருந்தால் நிச்சயம் அது, 2,3,4-ம் பாகங்கள் என சென்றிருக்கும்” என்று இயக்குநர் செல்வராகவன் தெரிவித்துள்ளார்.

> நடிகை ஹன்சிகா, கிரேக்கத்தில் உள்ள மைகனோஸ் தீவுக்குச் சென்றுள்ளார். அங்கிருந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

> சிரஞ்சீவியின் ‘காட்ஃபாதர்’ படத்தில் நடித்ததற்காக, நடிகர் சல்மான் கான் சம்பளம் வாங்கவில்லை. ‘இதுபோன்ற மனது யாருக்கு வரும்?’ என்று அவரை புகழ்ந்திருக்கிறார் சிரஞ்சீவி.

> ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் வந்தியத்தேவன் கேரக்டரில் நடித்திருக்கும் கார்த்தி, ‘இந்த அனுபவத்திற்கும் அற்புதமான பயணத்திற்கும் நான் உணரும் மகத்தான நன்றியை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது’ என்று தெரிவித்துள்ளார்.

> விஜய்சேதுபதி, அரவிந்த்சாமி, அதிதிராவ் நடிக்கும் ‘காந்தி டாக்ஸ்’ என்ற மவுனப் படத்தின் டீசர் நேற்று வெளியிடப்பட்டது. ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கும் இந்தப் படத்தை கிஷோர் பெலேகர் இயக்குகிறார். பான் இந்தியா முறையில் அடுத்த வருடம் வெளியாகிறது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE