ரூ.10 கோடி வசூலை குவித்த தனுஷின் நானே வருவேன் - இயக்குநரை பாராட்டிய தாணு

By செய்திப்பிரிவு

தனுஷ் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான 'நானே வருவேன்' திரைப்படம் முதல் நாள் வசூலாக ரூ.10 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த திரைப்படம் 'நானே வருவேன்'. இந்துஜா, பிரபு, யோகிபாபு நடித்துள்ள இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். படத்தில் இரட்டை வேடத்தில் தனுஷ் நடித்திருந்தார். கலைப்புலி தாணு தயாரித்திருந்த இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இந்நிலையில் படம் முதல் நாள் ரூ.10 கோடி 12 லட்சம் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் தயாரிப்பாளர் தாணு படத்தின் இயக்குநர் செல்வராகவனை நேரில் சந்தித்து மாலை அணிவித்து தனது மகிழ்ச்சியையும் வாழ்த்துகளையும் தெரிவித்திருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE