ஊடகத்தினரைத் தாக்கிய தமன்னாவின் பாதுகாவலர்கள்

By செய்திப்பிரிவு

நடிகை தமன்னா, இப்போது ‘பப்ளி பவுன்சர்’ என்ற இந்திப் படத்தில் நடித்துள்ளார். மதுர் பண்டார்கர் இயக்கியுள்ள இந்தப் படம் வரும் 23-ம் தேதி, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தின் விளம்பரத்துக்காக நடிகை தமன்னா, நேற்று ஹைதராபாத் வந்தார்.

அப்போது பத்திரிகை புகைப்படக் கலைஞர்கள், அவரை புகைப்படம் எடுக்க அனுமதி கேட்டனர். மறுப்புத் தெரிவித்த பாதுகாவலர்கள், அவர்களையும் ஊடகத்தினரையும் அவதூறாகப் பேசியுள்ளனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அவர்கள், புகைப்படக்காரர்களைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE