தூக்கில் தொங்கிய நிலையில் கவிஞர் கபிலன் மகள் தூரிகை உடல் மீட்பு

By செய்திப்பிரிவு

சென்னை: திரைப்பட பாடலாசிரியர் மற்றும் கவிஞர் கபிலன் மகள் தூரிகையின் தூக்கிட்ட நிலையில் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

திரைப்பட பாடலாசிரியர் மற்றும் கவிஞர் கபிலன் மகள் தூரிகை. எழுத்தாளரான தூரிகை, சில வருடங்கள் முன்புவரை முன்னணி ஆங்கில ஊடகத்தில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதிவந்தார். கடந்த 2020ம் ஆண்டு ”பீயிங் வுமன் (Being Women Magazine) என்னும் டிஜிட்டல் இதழை தொடங்கி, பெண்களுக்கான பத்திரிகையாக நடத்திவந்தார்.

இதனிடையே, இன்று சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் தூரிகையின் உடல் மீட்கப்பட்டுள்ளது. அவரின் மரணத்துக்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை. முதல்கட்டமாக அவரது உடலை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். தற்போது உடல் சாலிகிராமத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

தூரிகை எழுத்தாளராக மட்டுமல்ல, ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றி வந்தார். அவரின் தற்கொலை சினிமா மற்றும் எழுத்தாளர்கள் உலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

11 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்