சிவா இயக்கத்தில் சூர்யா: தொடங்கியது 'சூர்யா 42' படப்பிடிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: இயக்குநர் சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கியுள்ளன. முதல் முறையாக இயக்குநர் சிவாவுடன் சூர்யா இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போதைக்கு ‘சூர்யா 42’ என இந்தப் படம் அறியப்படுகிறது.

சிறுத்தை, வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம், அண்ணாத்த போன்ற படங்களை இயக்கியவர் இயக்குநர் சிவா. இவர் அடுத்து இயக்க உள்ள படத்தில் தான் சூர்யா இணைந்துள்ளார். சிவா படத்தில் சென்டிமென்ட் காட்சிகள் கொஞ்சம் தூக்கலாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் ஆக்‌ஷன் காட்சிகளும் அதகளமாக இருக்கும். இந்த இரண்டிலும் சூர்யா செம சூப்பராக ஸ்கோர் செய்வார்.

இந்தப் படத்தை UV கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டுடியோ கிரீன் படத்தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கின்றன. தேவிஸ்ரீபிரசாத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். சென்னை மற்றும் கோவாவில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடைபெறும் என தகவல். விரைவில் மோஷன் போஸ்டர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாலா இயக்கத்தில் வணங்கான், வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் போன்ற படங்களிலும் சூர்யா நடிக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE