நடிகர் தனுஷும் ஐஸ்வர்யா ரஜினியும் கடந்த ஜனவரி மாதம் பிரிவதாக அறிவித்தனர். 18 வருடமாக ஒன்றாக வாழ்ந்த அவர்களைச் சேர்த்து வைக்கும் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.
இருவரும் தங்களது வேலைகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். தனுஷ் நடிப்பில் கவனம் செலுத்த, பாலிவுட் படம் இயக்க இருக்கிறார், ஐஸ்வர்யா. இந்நிலையில் இருவரும் தங்கள் மகனுக்காக கருத்து வேறுபாடுகளை மறந்து ஒன்று சேர்ந்துள்ளனர். இவர்களின் மூத்த மகன் யாத்ரா, பள்ளியில் விளையாட்டு அணி கேப்டனாக நேற்று பொறுப்பேற்றார். இந்த விழாவில் தனுஷும், ஐஸ்வர்யாவும் கலந்துகொண்டனர். பாடகர் விஜய் யேசுதாசும் கலந்துகொண்டார். மகனுடன் இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.