இயக்குநரிடம் நடிகை அனுபமா மன்னிப்பு

By செய்திப்பிரிவு

தனுஷின் ‘கொடி’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் மலையாள நடிகை, அனுபமா பரமேஸ்வரன். அடுத்து அதர்வா ஜோடியாக, ‘தள்ளிப்போகாதே’ படத்தில் நடித்தார். தெலுங்கிலும் பல படங்களில் நடித்து வருகிறார். நிகில் ஜோடியாக இவர் நடித்த ’கார்த்திகேயா 2’ படம் கடந்த 13ம் தேதி வெளியாகி வெளியாகி வெற்றி பெற்றுள்ளது. இந்தப் படத்தை சந்து மொண்டேட்டி இயக்கி இருந்தார்.

இதன் வெற்றி விழா ஹைதராபாத்தில் நடந்தது. இதில் கலந்துகொண்ட அனுபமா பரமேஸ்வரன் மேடையில் இயக்குநர் சந்துவிடம் மன்னிப்புக் கேட்பதாகக் கூறினார்.

அவர் கூறும்போது, ‘‘இந்தப் படத்தின் ஷூட்டிங் குஜராத்தில் நடந்துகொண்டிருந்தபோது எனக்கு காயம் ஏற்பட்டது. கடுமையான முதுகுவலியால் அவதிப்பட்டேன். அந்த ஷெட்யூலின் கடைசி நாளில் தொழில்நுட்பப் பிரச்னையால் படப்பிடிப்பு தடைபட்டது. இது என்னை விரக்தி அடைய வைத்தது. அதற்காக இப்போது இயக்குநரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். என் வாழ்க்கையில் செய்த மிகப் பெரிய தவறு அது. இந்தப்படத்தில் சிறந்த கேரக்டரை வழங்கிய இயக்குநருக்கு நன்றி’’ என்றார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE