தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடப் படங்களில் நடித்து வருகிறார் நடிகர் நாசர். இவர் தெலுங்கு படம் ஒன்றில், நடிகைகள் மெஹ்ரின், சுகாசினி, நடிகர் சாயாஜி ஷிண்டே ஆகியோருடன் நடித்து வருகிறார்.
இதன் படப்பிடிப்பு, ஹைதராபாத்தில் உள்ள தெலங்கானா போலீஸ் அகாடமியில் நேற்று நடைபெற்றது. படப்பிடிப்பு முடிந்து படிகட்டுகளில் அவர் இறங்கி வந்தார். அப்போது கால் வழுக்கி கீழே விழுந்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதை அடுத்து அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதுபற்றி நாசரின் மனைவி கமீலாவிடம் கேட்டபோது, ‘‘லேசான காயம்தான். பயப்படும்படி ஏதுமில்லை. அவர் நலமாக இருக்கிறார்’’ என்றார்.