அருள் சரவணன் நடிப்பில் வெளியான 'தி லெண்ட்' திரைப்படம் முதல் நாள் 2 கோடி ரூபாய் அளவில் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெடி - ஜெர்ரி இயக்கத்தில் அருள் சரவணன் அறிமுக நடிகராக நடித்துள்ள படம் 'தி லெஜண்ட்'. இந்தப் படம் கடந்த 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஊர்வசி ரவுடேலா, கீதிகா திவாரி, சுமன், விவேக், யோகிபாபு, நாசர், ரோபோ ஷங்கர் என பெரிய நடிகர் பட்டாளமே நடித்திருந்தது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
விமர்சனத்தை படிக்க: முதல் பார்வை | தி லெஜண்ட் - மக்களை காக்க போராடுகிறார்... பார்வையாளர்கள் பிழைத்தனரா?
இந்தப் படம் தமிழ்நாட்டில் மட்டும் 600-க்கும் அதிகமான திரைகளிலும், நாடு முழுவதும் 1200 திரைகளில் வெளியானதாக கூறப்பட்டது.
» 4 தங்கம், 2 வெண்கலம் - துப்பாக்கிச் சுடுதலில் 6 பதக்கங்கள் வென்ற அஜித் அணி
» ‘ஏதேனும் நடந்தால் நானா படேகர் பொறுப்பு’ - ட்விட்டரில் நடிகை தனுஸ்ரீ தத்தா பதிவு
இந்நிலையில், 'தி லெஜண்ட்' தமிழகத்தில் முதல் நாள் ரூ.2 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பான் இந்தியா படமாக வெளியான இப்படம் உலகம் முழுக்க ரூ.6 கோடி வரை வசூலித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.