இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கும் புதிய படத்திற்கு இளையராஜா இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
'மாநாடு', 'மன்மத லீலை' படங்களுக்குப் பிறகு நடிகர் நாக சைதன்யாவை வைத்து தெலுங்கில் புதிய படம் ஒன்றை இயக்க இருக்கிறார் இயக்குநர் வெங்கட்பிரபு. இந்தப் படத்துக்கான பூஜை அண்மையில் நடைபெற்றது.
தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெங்கட்பிரபுவை பொறுத்தவரை, அவரது முந்தைய படங்களுக்கு யுவன் சங்கர் ராஜா, பிரேம்ஜி மட்டுமே இசையமைத்துள்ளனர்.
இந்நிலையில், முதன்முறையாக இளையராஜாவுடன் வெங்கட்பிரபு இணையவுள்ளார். இப்படத்தின் பாடல்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
» ‘விக்ரம்’ படத்தால் தள்ளிப்போன ஹரி - அருண் விஜய்யின் ‘யானை’ ரிலீஸ்
» சீனுராமசாமி - ஜிவிபிரகாஷ் கூட்டணியில் ‘இடி முழக்கம்’ - ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
நாக சைதன்யா ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில் அருண் விஜய் வில்லனாக நடிப்பார் எனவும் கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரபூர்வ தகவல்கள் விரைவில் வெளியாக உள்ளன.