மலையாளம் டு தமிழ் சினிமா ரீமேக்... சலச்சித்திரங்கள் சிதைக்கப்படுவது ஏன்? - ஓர் அலசல்

By கலிலுல்லா

கடந்த இரண்டு வாரங்களில் நான்கு படங்கள் மலையாளத்திலிருந்து தமிழுக்கு ரீமேக் செய்யப்பட்டுள்ளன. 'ஹாஸ்டல்', 'பயணிகள் கவனிக்கவும்', 'கூகுள் குட்டப்பா' மற்றும் 'விசித்திரன்' ஆகிய படங்கள் மலையாளத்திலிருந்து தமிழுக்கு வரிசையாக படையெடுத்துள்ளன. அண்மையில் வந்த இந்த 4 படங்களும் அவற்றின் அசல் தன்மையை பிரதிபலித்துள்ளதா? அவற்றில் நிலவும் சிக்கல்கள் என்னென்ன? - இது குறித்து சற்றே விரிவாகப் பார்ப்போம்.

பொதுவாக ரீமேக் செய்யப்படும் படங்கள் அப்படியே இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. மாறாக, சம்பந்தப்பட்ட படத்தின் உணர்வை பிசகாமல் மண்ணுக்கேற்ப கடத்தினாலே போதுமானது. அதுவே, அந்தப் படத்தை ரீமேக் செய்ததற்கான நியாயத்தை சேர்த்துவிடும். ரீமேக் செய்யப்படும் படத்தின் உணர்வை ஒரு பார்வையாளன் பெறுவதற்கு இயக்குநர்கள் எந்த திரைக்கதை ட்ரீட்மென்டை வேண்டுமானாலும் கையாளலாம். ஆனால் சிக்கல் என்னவென்றால், அப்படியான உணர்வுகளை கடத்துவதில் இயக்குநர்கள் தடுமாறுவதைக் காணக் முடிகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE