ஏ.ஆர் ரஹ்மான் இசையில் 'வெந்து தணிந்தது காடு’: முதல் பாடல் அப்டேட் வெளியானது

By செய்திப்பிரிவு

நடிகர் சிம்பு நடித்திருக்கும் 'வெந்து தணிந்தது காடு' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் முதல் பாடல் குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளது படக்குழு.

கௌதம் வாசுதேவ் மேனன் - ஏ.ஆர்.ரஹ்மான் - சிம்பு கூட்டணி மூன்றாவது முறையாக இணையும் திரைப்படம் 'வெந்து தணிந்தது காடு'. 'விண்ணை தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையாடா' படங்களுக்குப் பிறகு உருவாகியிருக்கும் இந்த காம்போவுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஐசரி கணேசன் தயாரிக்கும் இந்தப் படத்தில் சித்தி இதானி நாயகியாக நடிக்கிறார்.

ராதிகா உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். எழுத்தாளர் 'ஜெயமோகன்' எழுதிய 'அக்னி குஞ்சொன்று கண்டேன்' கதையை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளது.

இந்நிலையில், படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக சமீபத்தில் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். படம் ஜூன் மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இப்போது முதல் பாடல் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி, வரும் மே 6 ஆம் தேதி முதல் பாடல் வெளியாகிறது. இதை ஒரு போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர். போஸ்டரில் நாயகி சித்தி இதானியுடன் நடந்து வருகிறார் சிம்பு. இந்த போஸ்டர் போலவே பாடலுக்கான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. காரணம் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க தாமரை பாடல்கள் எழுதியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE