தான் நடித்த 'ஜெயேஷ்பாய் ஜோர்தார்' படத்தை பார்த்து கண்ணீர் வராவிட்டால், நீங்கள் டிக்கெட்டுக்காக கொடுத்த பணத்தை வாபஸ் வாங்கிக்கொள்ளுங்கள் என்று பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் இயக்குநர் திவ்யாங் தக்கர் (Divyang Thakkar) இயக்கத்தில் நடிகர் ரன்வீர் சிங் நடிக்கும் திரைப்படம் 'ஜெயேஷ்பாய் ஜோர்தார்' (Jayeshbhai Jordaar). ஆதித்யா ஜோப்ராவின் யாஷ் ராஜ் ஃப்லீம்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது. இந்தப் படத்தில் ரன்வீர் சிங் உடன் ஷாலினி பாண்டே, தீக்ஷா ஜோஷி உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் நடித்துள்ளனர்.
கடந்த பிப்ரவரி மாதமே வெளியாகவேண்டிய இந்தத் திரைப்படம் ஒமைக்ரான் கொரோனா வகை பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், மே13-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமூகத்தில் நிலவும் ஆணாதிக்கத்துக்கு எதிராக போராடும் நாயகன் குறித்து கதை என ஏற்கெனவே படக்குழு தெரிவித்திருந்தது.
இந்நிலையில், நடிகர் ரன்வீர்சிங், `ஃபெமினா ப்யூட்டிஃபுல் இந்தியன்ஸ் 2022’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது இந்த படம் குறித்து கேள்வி கேட்ட நிருபர்களிடம் பேசிய ரன்வீர் சிங், ''திரைப்படத்தை பார்க்கும் ஒவ்வொருவருக்கும் நிச்சயம் அழுகை வரும். ஒருவேளை வரவில்லை என்றால், டிக்கெட்டிற்கான பணத்தை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்” என்று தெரிவித்தார்.
» சமந்தாவின் 'யசோதா' ஆக.12-ல் வெளியீடு
» சம்பள பாக்கி | 3 ஆண்டுகளுக்கு பிறகு மனு தாக்கல் செய்தது ஏன்? - சிவகார்த்திகேயனுக்கு ஐகோர்ட் கேள்வி