‘விஜய் 66’ ஒரு எமோஷனல் குடும்பப் படமாக இருக்கும் - தயாரிப்பாளர்

By செய்திப்பிரிவு

‘விஜய் 66’ ஒரு எமோஷனல் குடும்பத் திரைப்படமாக இருக்கும் இருக்கும் என்று தயாரிப்பாளர் தில் ராஜு கூறியுள்ளார். படப்பிடிப்பை வரும் மார்ச் மாதம் தொடங்கி, வரும் தீபாவளி அல்லது அடுத்த ஆண்டு பொங்கலுக்கு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

'பீஸ்ட்' படத்தைத் தொடர்ந்து தில் ராஜு தயாரிக்கவுள்ள புதிய படத்தில் நடிக்க விஜய் ஒப்பந்தமாகியுள்ளார். 'தோழா', 'மஹரிஷி' உள்ளிட்ட படங்களின் இயக்குநர் வம்சி இதனை இயக்கவுள்ளார். இது விஜய் நடிப்பில் உருவாகும் 66-வது படம் என்பதால் 'விஜய் 66' என்று அழைக்கப்படுகிறது. தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் இந்தப் படம் உருவாகிறது. இப்படத்துக்கு தமன் இசையமைக்கிறார்.

இப்படத்தில் தயாரிப்பாளர் தில் ராஜு சமீபத்தில் தெலுங்கு சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் ‘விஜய் 66’ படம் குறித்த தகவல்களை பகிர்ந்திருந்தார். அதில் இப்படத்தின் கதையை கேட்ட விஜய் கடந்த 20 ஆண்டுகளாக இப்படி ஒரு கதையை தான் கேட்கவில்லை என்று கூறியதாக தில் ராஜு தெரிவித்திருந்த செய்தி இணையத்தில் வைரலானது.

இந்நிலையில், மற்றோரு பேட்டியில் தில் ராஜு பேசும்போது “இப்படம் நீண்ட நாட்களுக்குப் பிறகு விஜய் நடிக்கும் எமோஷனல் குடும்பத் திரைப்படமாக இருக்கும். அதற்காக இயக்குநர் வம்சி சிறப்பான முறையில் முயற்சி செய்து வருகிறார். ‘விஜய் 66’ படம் ஆக்‌ஷன், மாஸ், அருமையான பாடல்கள் கொண்ட இதயத்தை தொடும் ஒரு முழுமையான குடும்பப் பொழுதுபோக்குப் படமாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பை வரும் மார்ச் மாதம் தொடங்கி வரும் தீபாவளி அல்லது அடுத்த ஆண்டு பொங்கலுக்கு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் தில் ராஜு கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE