நடிகர் அருண் விஜய்க்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் குறைந்து வந்த நிலையில் கடந்த சில வாரங்களாக அதிகரித்துவருகிறது. கடந்த அக்டோபர் மாதத்துக்குப்பின் தினசரி தொற்று 20 ஆயிரத்துக்குமேல் சென்றுள்ளது. இதில் கரோனா வைரஸின் உருமாற்றமான ஒமைக்ரான் வைரஸ் பரவலும் இருப்பதால் பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் நாடு முழுவதும் மாநில அரசுகள் கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.
இந்நிலையில் நடிகர் அருண் விஜய் தனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது:
‘எனக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். நான் தற்போது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். மருத்துவரின் அறிவுரைப்படி அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றி வருகிறேன். அனைவரது அன்புக்கும் நன்றி’
» கார்த்திக் நரேனின் 'நிறங்கள் மூன்று' படப்பிடிப்பு தொடக்கம்
» ‘என்ன கைமாறு செய்யப் போகிறேன்’ - ‘மாநாடு’ படக்குழுவை பாராட்டிய அல்போன்ஸ் புத்திரன்
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.