‘மகேஷ் பாபுவுடன் பணியாற்றி வருகிறேன்’ - உறுதி செய்த ராஜமௌலி 

By செய்திப்பிரிவு

மகேஷ் பாபுவுடன் பணியாற்றி வருவதை இயக்குநர் ராஜமௌலி உறுதி செய்துள்ளார்.

ராஜமெளலி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'இரத்தம் ரணம் ரெளத்திரம்'. இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டிவிவி நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படம் வரும் வரும் ஜனவரி 7 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அதற்கான விளம்பரப் பணிகள் முழு மூச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இப்படத்தை விளம்பரப்படுத்துவதற்காக நேற்று ராஜமௌலி, ஆலியா பட் உள்ளிட்ட படக்குழுவினர் சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். இதில் பல்வேறு தகவல்களை ராஜமௌலி பகிர்ந்து கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

''நான் தற்போது மகேஷ் பாபுவுடன் பணியாற்றி வருகிறேன். ஆனால், இப்போது அப்படத்தைப் பற்றி நான் எதுவும் யோசிக்கவில்லை. என்னுடைய முழுக் கவனமும் இப்போது ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் மேல்தான் இருக்கிறது. இப்படத்தைப் பார்வையாளர்களிடம் கொண்டுசேர்த்துப் பெரிய திரையில் இப்படத்தை பார்க்கும் அவர்களது உணர்வு எப்படி இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்''.

இவ்வாறு ராஜமௌலி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE