வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாநாடு'. இதில் எஸ்.ஏ.சி, எஸ்.ஜே.சூர்யா, மனோஜ், கல்யாணி ப்ரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட பலர் சிலம்பரசனுடன் நடித்துள்ளனர். யுவன் இசையமைத்துள்ள இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.
இப்படம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாவிருந்து பின்னர் நவ.25ஆம் தேதிக்கு (நாளை) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் 'மாநாடு' படம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனை படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியுள்ளதாவது:
நிறைய கனவுகளோடு படைக்கப்பட்ட ஓர் படைப்பு. இதின் பிரசவத்தை எதிர்நோக்கிக் காத்திருந்திருந்தேன்.
» ஷங்கருக்கு போட்டியாக ஆஸ்கர் ரவிச்சந்திரன்: மீண்டும் சர்ச்சையில் ’அந்நியன்’ ரீமேக்
» மருத்துவமனையில் கமல்: இந்த வார ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியை நடத்தப் போவது யார்?
தவிர்க்க இயவாத காரணங்களால் மாநாடு வெளியீடு தள்ளி வைக்கப்படுகிறது என்பதை மிகுந்த வலியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கிறேன் ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.