சமந்தாவின் புதிய படம் அதிகாரபூர்வ அறிவிப்பு

சமந்தா நடிக்கவுள்ள அடுத்த படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சில மாதங்களாகவே சமந்தா எந்தவொரு புதிய படத்திலும் ஒப்பந்தமாகாமல் இருந்தார். நாக சைதன்யாவுடன் ஏற்பட்ட பிரச்சினையால் முழு ஓய்வில் இருந்தார். சமீபத்தில் நாக சைதன்யா - சமந்தா இருவரும் பிரிவதாகக் கூட்டாக அறிவித்தனர்.

தற்போது சமந்தா அடுத்து நடிப்பதற்காகப் புதிய கதைகள் கேட்டு வந்தார். இதில் அவருடைய அடுத்த படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று (அக்டோபர் 15) விஜயதசமியை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதனை அறிமுக இயக்குநர் சாந்தரூபன் இயக்கவுள்ளார். சமந்தாவுடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE