வசூல் ரீதியாக வரவேற்பு: 'டாக்டர்' படக்குழுவினர் மகிழ்ச்சி

By செய்திப்பிரிவு

வசூல் ரீதியாகவும் 'டாக்டர்' படத்துக்குப் பெரும் வரவேற்பு கிடைத்திருப்பதால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், வினய், யோகி பாபு, பிரியங்கா அருள் மோகன், ரெடின் கிங்ஸ்லி, அர்ச்சனா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'டாக்டர்'. சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டியோஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளது. இந்தப் படத்துக்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்தது.

பல்வேறு திரையுலக பிரபலங்களும் படத்தைப் பார்த்துவிட்டுப் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர். தற்போது வசூல் ரீதியாகவும் 'டாக்டர்' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

தமிழகத்தில் 'டாக்டர்' படத்தின் முதல் நாள் வசூல் 8.2 கோடி ரூபாய் என்று படக்குழுவினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே அளவிலேயே நேற்றைய (அக்டோபர் 10) வசூலும் இருக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. முதல் இரண்டு நாட்களிலேயே இந்த அளவுக்கு வசூல் செய்திருப்பதால் படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

பல்வேறு திரையரங்குகளில் இன்று (அக்டோபர் 11) காலையில் கூட சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE