விவேக் இடத்தையும் சேர்த்து நிரப்ப வேண்டிய பொறுப்பு தனக்கு உள்ளது என்று வடிவேலு தெரிவித்தார்.
வடிவேலு மீதான பிரச்சினைகள் அனைத்தும் பேசித் தீர்க்கப்பட்டு மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளார். முதலாவதாக சுராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கத் தேதிகள் ஒதுக்கியுள்ளார். இதனை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
சுராஜ் - வடிவேலு இணையும் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் இன்று (செப்டம்பர் 10) நடைபெற்றது. இதில் வடிவேலு பேசி முடித்தவுடன், பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அவை பின்வருமாறு:
» விஜய் ஆண்டனிக்கு புகழாரம் சூட்டிய டி.சிவா
» திரைத்துறையில் பலர் கூட்டுச் சதி செய்து தயாரிப்பாளரை அழிக்கிறார்கள்: கே.ராஜன் காட்டம்
திமுக ஆட்சி எப்படி இருக்கிறது?
திமுக ஆட்சி எனக்கு மட்டுமல்ல, மக்களுக்கு எல்லாமே நன்றாக உள்ளது. மக்கள் சந்தோஷப்படுகிறார்கள்.
மறைந்த நடிகர் விவேக் குறித்து?
அவன் ஒரு அருமையான நண்பன். அவன் இறந்தது திரையுலகிற்கும், மக்களுக்கும் பெரிய இழப்பு. அவனுடைய இறப்பை என்னால் மறக்கவே முடியாது. என்னுடைய சக நடிகன். அவன் போனது பெரிய வேதனை. அவன் ஆத்மா சாந்தி அடைய வேண்டும். அவன் இடத்தையும் சேர்த்து நிரப்ப வேண்டிய பொறுப்பைக் கடவுள் எனக்குக் கொடுத்துள்ளார்.