ரியோ நாயகனாக நடித்துள்ள பிளான் பண்ணி பண்ணனும் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு' படத்துக்குப் பிறகு, மீண்டும் ரியோ ராஜ் நாயகனாக நடித்துள்ள படம் 'பிளான் பண்ணி பண்ணனும்'. பத்ரி வெங்கடேஷ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ரம்யா நம்பீசன் நாயகியாக நடித்துள்ளார். எம்.எஸ்.பாஸ்கர், சந்தான பாரதி, ரேகா, பால சரவணன், மாரிமுத்து, விஜி சந்திரசேகர், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக முடித்தது படக்குழு.
இந்தப் படத்தின் பணிகள் அனைத்துமே முடிந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது. கரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகள் மூடப்பட்டு இருந்ததால் வெளியீட்டுக்காகக் காத்திருந்தது. தற்போது ஆகஸ்ட் 23-ம் தேதி முதல் தமிழகத்தில் திரையரங்குகள் 50% இருக்கை அனுமதியுடன் செயல்பட்டு வருகின்றன.
இதனைத் தொடர்ந்து 'பிளான் பண்ணி பண்ணனும்' படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை வீடியோ ஒன்றின் மூலம் அறிவித்துள்ளார் நாயகன் ரியோ ராஜ்.
» பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம்
» ஒரு படத்தைப் பார்த்துவிட்டு நன்றாக இல்லை என விமர்சிக்காதீர்கள்: விஜய் சேதுபதி