செப்டம்பரில் வெளியாகும் ஜோஷ்வா

By செய்திப்பிரிவு

கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜோஷ்வா' படத்தை செப்டம்பரில் வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது.

'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்துக்குப் பிறகு கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'ஜோஷ்வா: இமை போல் காக்க'. வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தில் வருண், ராஹி, கிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இதன் படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டது. தற்போது கரோனா அச்சுறுத்தலுக்குப் பின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டது படக்குழு. சமீபத்தில் வெளியிடப்பட்ட டீஸர் மற்றும் பாடலுக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

'ஜோஷ்வா' சம்பந்தப்பட்ட அனைத்து பணிகளையும் முடித்துக் கொடுத்துவிட்டார் கெளதம் மேனன். தமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் திரையரங்குகள் திறக்க வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது. இதனால், 'ஜோஷ்வா' படத்தை செப்டம்பரில் வெளியிட வேல்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

திரையரங்குகள் திறப்பு தொடர்பான அறிவிப்பு வெளியானவுடன், 'ஜோஷ்வா' விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE