'நதிகளிலே நீராடும் சூரியன்' படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடக்கம்

By செய்திப்பிரிவு

'நதிகளிலே நீராடும் சூரியன்' படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் முதல் வாரம் தொடங்கவுள்ளது.

'விண்ணைத்தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' ஆகிய படங்களைத் தொடர்ந்து கெளதம் மேனன் - சிலம்பரசன் இருவரும் மீண்டும் இணைந்து பணிபுரியவுள்ளனர். 'நதிகளிலே நீராடும் சூரியன்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்தப் படத்தில் சிலம்பரசனுடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வந்தது. ஆனால், எப்போது படப்பிடிப்பு தொடங்கும் என்பது தெரியாமல் இருந்தது. தற்போது 'நதிகளிலே நீராடும் சூரியன்' படத்தின் போட்டோ ஷூட் பணிகள் முடிந்துவிட்டன. இதனை சென்னையில் உள்ள ஸ்டுடியோ ஒன்றில் எடுத்து முடித்துள்ளார் கெளதம் மேனன்.

ஆகஸ்ட் முதல் வாரத்தில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது படக்குழு. இதற்கான ஆயத்தப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராகவும், பாடலாசிரியராக தாமரையும் பணிபுரிந்து வருகிறார்கள்.

'நதிகளிலே நீராடும் சூரியன்' படத்தின் பாடல் பதிவு பணிகளை முடித்துக் கொடுத்துவிட்டார் ஏ.ஆர்.ரஹ்மான். இதனால் முழுவீச்சில் படப்பிடிப்பை முடித்துக் கொடுக்க கெளதம் மேனன் திட்டமிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE