தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பாகும் அடுத்த படம்

By செய்திப்பிரிவு

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'பூமிகா' திரைப்படம் நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.

கரோனா அச்சுறுத்தலால் இன்னும் திரையரங்குகள் திறக்கப்படாமல் உள்ளன. இதனால் பல்வேறு படங்கள் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன. மேலும், சில படங்கள் நேரடியாகத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு பின்பு ஓடிடி தளத்தில் வெளியிடப்படுகின்றன.

'மண்டேலா', 'வெள்ளை யானை' உள்ளிட்ட சில படங்களைத் தொடர்ந்து, தற்போது 'பூமிகா' படமும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் விஜய் டிவியில் 'பூமிகா' படம் ஒளிபரப்பாகும். அன்றைய தினமே நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ரதீந்திரன் ஆர்.பிரசாத் இயக்கியுள்ளார். த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுக்க மலைப் பகுதிகளில் நடைபெற்றுள்ளது. இது ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள 25-வது படமாகும். இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக ராபர்ட், இசையமைப்பாளராக ப்ரித்வி சந்திரசேகர், எடிட்டராக ஆனந்த் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE