பிரபுதேவாவின் புதிய படம்: படப்பிடிப்பு தொடக்கம்

By செய்திப்பிரிவு

சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

'இரண்டாம் குத்து' படத்துக்குப் பிறகு தனது அடுத்த படத்துக்காகத் தயாராகி வந்தார் சந்தோஷ் பி.ஜெயக்குமார். முழுக்க கமர்ஷியல் பாணியில் அவர் உருவாக்கிய கதையை மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க முன்வந்தது.

இந்தக் கதையில் நாயகனாக நடிக்க பிரபுதேவா ஒப்பந்தமானார். இதனைத் தொடர்ந்து படத்தின் முதற்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டன. அவை அனைத்தம் முடிந்த நிலையில், இன்று (ஜூலை 15) முதல் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

இதில் பிரபுதேவாவுடன், வரலட்சுமி சரத்குமார், ரைசா வில்சன் ஆகியோர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக பல்லூ, இசையமைப்பாளராக டி.இமான் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE