மீண்டும் படப்பிடிப்பில் உதயநிதி ஸ்டாலின்

By செய்திப்பிரிவு

மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பில் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார் .

மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகும் படம், அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகும் 'ஆர்டிகிள் 15' ரீமேக் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வந்தார் உதயநிதி ஸ்டாலின். இரண்டு படங்களிலிருந்து சில காலம் ஓய்வெடுத்து, தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

எம்எல்ஏ ஆன பின்பும் முழுமையாகத் தனது சேப்பாக்கம் தொகுதியிலேயே பணிபுரிந்து வந்தார். இது தொடர்பான வீடியோ பதிவுகளையும் தனது ட்விட்டர் பக்கத்திலேயே வெளியிட்டு வந்தார் உதயநிதி. எப்போது படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்பது தெரியாமல் இருந்தது.

தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பில் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். இதன் படப்பிடிப்பு திருப்போரூரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் சில முக்கியமான காட்சிகளைப் படமாக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது. ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்து வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE