'மாநாடு' படப்பிடிப்பு நிறைவு: படக்குழுவினருக்கு சிம்பு பரிசு

By செய்திப்பிரிவு

'மாநாடு' படப்பிடிப்பு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, படக்குழுவினருக்கு சிம்பு பரிசு வழங்கியுள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் படம் 'மாநாடு'. எஸ்.ஏ.சி, எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி ப்ரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட பலர் சிம்புவுடன் நடித்துள்ளனர். யுவன் இசையமைத்து வருகிறார். சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார்.

கரோனா அச்சுறுத்தலால் 'மாநாடு' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. தற்போது கரோனா அச்சுறுத்தல் குறைந்தவுடன் சென்னையில் சில காட்சிகளின் படப்பிடிப்பை முடித்தது படக்குழு. அதற்குப் பிறகு படத்தின் முக்கியமான விமானக் காட்சிகளை ஓசூரில் படமாக்கினார்கள்.

இதன் படப்பிடிப்பு முடிவடைந்ததைத் தொடர்ந்து, ஒட்டுமொத்தப் படப்பிடிப்பும் முடிந்துவிட்டதாக 'மாநாடு' படக்குழு அறிவித்துள்ளது. இதனை கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளனர். மேலும், படக்குழுவினர் அனைவருக்கும் விலையுர்ந்த வாட்ச் ஒன்றைப் பரிசாக வழங்கியுள்ளார் சிம்பு.

'மாநாடு' படப்பிடிப்பு முடிவடைந்ததைத் தொடர்ந்து, இறுதிக்கட்டப் பணிகளில் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளது படக்குழு.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE