கமலிடம் ஃபகத் பாசில் கேட்க விரும்பும் கேள்வி

By செய்திப்பிரிவு

கமலிடம் கேட்க விரும்பும் கேள்வி என்ன என்பதை ஃபகத் பாசில் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கவுள்ள படம் 'விக்ரம்'. ராஜ்கமல் நிறுவனம் மற்றும் டர்மரீக் மீடியா நிறுவனம் இணைந்து தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஒளிப்பதிவாளராக க்ரிஷ் கங்காதரன், இசையமைப்பாளராக அனிருத், சண்டைக் காட்சிகளின் இயக்குநராக அன்பறிவ் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.

இதில் கமலுடன் ஃபகத் பாசில் நடிக்கவுள்ளது உறுதியாகியுள்ளது. இதனை சில தினங்களுக்கு முன்பு அளித்த பேட்டியில் ஃபகத் பாசிலே உறுதிப்படுத்தினார். 'வேலைக்காரன்' மற்றும் 'சூப்பர் டீலக்ஸ்' ஆகிய படங்களைத் தொடர்ந்து, ஃபகத் பாசில் நடிக்கவுள்ள தமிழ்ப் படமாக 'விக்ரம்' அமைந்துள்ளது.

ஃபகத் பாசில் நடிப்பில் உருவாகியுள்ள 'மாலிக்' திரைப்படம் ஓடிடியில் ஜூலை 16-ம் தேதி வெளியாகவுள்ளது. இதனை விளம்பரப்படுத்த 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்குப் பேட்டியளித்துள்ளார். அதில் " 'விக்ரம்' முதல் நாள் படப்பிடிப்பின்போது கமலிடம் கேட்க விரும்புவது" என்ற கேள்விக்கு ஃபகத் பாசில் கூறியிருப்பதாவது:

"அவருடன் படப்பிடிப்பில் பங்கேற்க நான் ஆர்வமாகக் காத்திருக்கிறேன். அவரது அத்தனை திரைப்படங்களும் எனக்குப் பிடிக்கும். 'மைக்கேல் மதன காமராஜன்', 'குருதிப்புனல்', 'குணா' எனச் சொல்லிக்கொண்டே போகலாம். அவரிடம் ஒன்றுதான் கேட்க நினைக்கிறேன். எப்படி உங்களால் முடிகிறது?"

இவ்வாறு ஃபகத் பாசில் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE