இறுதிக்கட்ட படப்பிடிப்பில் ராதே ஷ்யாம்

By செய்திப்பிரிவு

பிரபாஸ் நடித்து வரும் 'ராதே ஷ்யாம்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

ராதா கிருஷ்ணா இயக்கத்தில் பிரபாஸ், பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ராதே ஷ்யாம்'. 'சாஹோ' படத்தைத் தயாரித்த யு.வி. கிரியேஷன்ஸ் நிறுவனம்தான் இந்தப் படத்தையும் தயாரித்து வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் ஒரே சமயத்தில் 'ராதே ஷ்யாம்' வெளியாகவுள்ளது.

இந்தப் படத்தின் முக்கியக் காட்சிகளை இத்தாலி நாட்டில் படமாக்கியுள்ளது படக்குழு. மேலும், சில காட்சிகளை ஹைதராபாத்தில் பிரம்மாண்ட அரங்குகள் அமைத்துப் படமாக்கினார்கள். அதனைத் தொடர்ந்து இறுதிக்கட்ட படப்பிடிப்பின் போது தான் கரோனா அச்சுறுத்தல் தொடங்கியது. இதனால் படப்பிடிப்பு தடைப்பட்டது.

தற்போது கரோனா அச்சுறுத்தல் குறைந்து படப்பிடிப்புக்கு ஆந்திராவில் அனுமதி அளிக்கப்பட்டுவிட்டது. இதனால், பல்வேறு படப்பிடிப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதில் நேற்று (ஜூன் 25) முதல் 'ராதே ஷ்யாம்' படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

இந்தப் படப்பிடிப்பின் மூலம் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடிக்கப் படக்குழு முடிவு செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து இறுதிக்கட்ட பணிகளை முடித்து, வெளியீட்டுத் தேதியை முடிவு செய்யவுள்ளது படக்குழு.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE