கூட்டணி சேரும் முருகதாஸ் - யாஷ்

By செய்திப்பிரிவு

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், ‘தர்பார்’ படத்தை தொடர்ந்து, கதை உருவாக்கும் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில், அடுத்தடுத்து 3 கதைகளுக்கான திரைக்கதைகளை முடித்திருக்கிறார். தமிழில் கமல்ஹாசனுடன் இணைந்து ஒரு படம் இயக்க வேண்டும் என்பது அவரது நீண்ட நாள் ஆசை. இதன்படி, கமலை சந்தித்து கதை கூறியுள்ளார். சமீபத்தில் ‘கேஜிஎஃப்’ படத்தின் நாயகன் யாஷை சந்தித்து ஒரு கதையை கூறியுள்ளார். இப்படத்தை இந்திய அளவில் பிரம்மாண்டமாக உருவாக்கும் திட்டத்தில் இருவரும் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளனர். இப்படம் தொடர்பான அறிவிப்பு மிக விரைவில் வெளிவரும் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே, கமலின் பதிலுக்காகவும் காத்திருக்கிறார் முருகதாஸ்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE