திரைத்துறையில் ஒரு மைல்கல் 'இறைவி' என்று எஸ்.ஜே.சூர்யா தனது ட்விட்டர் பதிவில் புகழாரம் சூட்டியுள்ளார்.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, அஞ்சலி, கமாலினி முகர்ஜி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'இறைவி'.
2016-ம் ஆண்டு ஜூன் 3-ம் தேதி வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆனால், வசூல் ரீதியாகப் பெரிதாக எடுபடவில்லை.
சி.வி.குமார், அபினேஷ் இளங்கோவன் மற்றும் ஞானவேல்ராஜா ஆகியோர் இப்படத்தை தயாரித்திருந்தார்கள். இன்றுடன் (ஜூன் 3) இந்தப் படம் வெளியாகி 5 ஆண்டுகள் ஆகின்றன. இதனை முன்னிட்டு 'இறைவி' படத்தின் இயக்குநர், நடிகர்கள், தங்களுடைய நினைவுகளை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.
» மகேஷ் பாபு படம் தொடர்பான வதந்தி: உறுதி செய்த கதாசிரியர்
» தூய பேரன்பினைப் பொழிந்த ஓர் அண்ணனை இழந்துவிட்டேன்: ஜி.என்.ரங்கராஜன் மறைவுக்கு கமல் இரங்கல்
இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த எஸ்.ஜே.சூர்யா தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"இந்தப் படம் நமது திரைத்துறையில் ஒரு மைல்கல். நன்றி இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் அவர்களே. என்னைத் தேர்ந்தெடுத்து அதில் ஒரு பங்காற்ற வைத்தீர்கள். ரயில்வே நிலைய காட்சி படமாக்கிய தினத்தை இன்னும் என்னால் மறக்க முடியவில்லை"
இவ்வாறு எஸ்.ஜே.சூர்யா தெரிவித்துள்ளார்.