ரஜினி - லெஜண்ட் சரவணன் சந்திப்பு: வைரலாகும் புகைப்படம்

சென்னையில் ஒரே இடத்தில் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, ரஜினி - லெஜண்ட் சரவணன் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் 'அண்ணாத்த' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

அதே போல் இயக்குநர்கள் ஜேடி - ஜெர்ரி இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பும் சென்னையில் தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த இரண்டு படப்பிடிப்புகளுமே சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டுடியோஸ் அரங்குகளில் நடைபெற்று வருகின்றன. இதன் தகவல் வெளியானவுடனே, இருவரும் சந்தித்துக் கொள்வார்கள் என்று சமூக வலைதளத்தில் பலரும் கருத்துகளைப் பதிவிட்டு வந்தார்கள்.

அதைப் போலவே ரஜினி - லெஜண்ட் சரவணன் சந்திப்பு நடைபெற்றுள்ளது. அதன் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் லெஜண்ட் சரவணனைப் பார்த்து ரஜினி கும்பிடுவது போல புகைப்படம் அமைந்துள்ளது.

சென்னையில் 'அண்ணாத்த' படத்தின் படப்பிடிப்பு முடிவுற்றவுடன், அடுத்தகட்டப் படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தலை முன்வைத்து முடிவு செய்யப் படக்குழு தீர்மானித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE