நந்தா பெரியசாமி - கவுதம் கார்த்திக் இணையும் ஆனந்தம் விளையாடும் வீடு

By செய்திப்பிரிவு

நந்தா பெரியசாமி இயக்கத்தில் கவுதம் கார்த்திக், சேரன் உள்ளிட்ட பலர் நடிக்கும் படத்துக்கு 'ஆனந்தம் விளையாடும் வீடு' எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு.

2015-ம் ஆண்டு நந்தா பெரியசாமி இயக்கத்தில் வெளியான படம் 'ஜிகினா'. இந்தப் படத்துக்குப் பிறகு பல படங்களில் நடிகராக நடித்துக்கொண்டே, தனது அடுத்த படத்துக்குக் கதைகள் எழுதி வந்தார். அப்படி அவர் எழுதிய கதையொன்றில் டாப்ஸி நடித்து வருகிறார். இந்தியில் உருவாகும் இந்தப் படத்துக்கு 'ராஷ்மி ராக்கெட்' எனப் பெயரிட்டுள்ளனர்.

அந்தப் படத்துக்குப் பிறகு புதிதாக ஒரு கதை எழுதி இயக்கி வருகிறார் நந்தா பெரியசாமி. இந்தப் படத்தை ரங்கநாதன் தயாரிக்கவுள்ளார். கவுதம் கார்த்திக், சேரன், சிங்கம் புலி, சரவணன், சிநேகன், விக்னேஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

இந்தப் படத்துக்கு 'ஆனந்தம் விளையாடும் வீடு' எனப் பெயரிடப்பட்டு, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளது படக்குழு. முழுக்க குடும்பத்துப் பின்னணியில் இந்தப் படம் உருவாகி வருவதை போஸ்டர் மூலம் உணர முடிகிறது.

இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக பொர்ரா பாலபரணி, இசையமைப்பாளராக சித்துகுமார், கலை இயக்குநராக சகு, எடிட்டராக ஆர்.பி.ஸ்ரீகாந்த் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். ஒரே கட்டமாக இந்தப் படத்தின் படப்பிடிப்பை முடிக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE