விஜய் ஆண்டனி நடித்து வரும் 'கோடியில் ஒருவன்' படத்தின் படப்பிடிப்பு முடிவுற்றுள்ளது. ஏப்ரலில் வெளியாகவுள்ளது.
'தமிழரசன்', 'அக்னிச் சிறகுகள்' 'காக்கி', 'கோடியில் ஒருவன்' மற்றும் 'பிச்சைக்காரன் 2' ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் விஜய் ஆண்டனி. இதில் சில படங்களின் படப்பிடிப்பு முடிவுற்று, இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தற்போது 'கோடியில் ஒருவன்' படத்தின் படப்பிடிப்பும் முடிவுற்றதாகப் படக்குழு அறிவித்துள்ளது. டி.ராஜா மற்றும் தனஞ்ஜெயன் இணைந்து தயாரித்து வரும் இந்தப் படத்தை ஆனந்த் கிருஷ்ணன் இயக்கியுள்ளார்.
சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளிலேயே முழுப்படப்பிடிப்பையும் முடித்துவிட்டது படக்குழு.
» ’அந்த நடிகையை பளார்னு அறைந்துவிட்டேன்!’ - பாரதிராஜாவின் ‘கல்லுக்குள் ஈரம்’ அனுபவங்கள்
» உடல் எடையைக் குறைக்க கிட்டத்தட்ட செத்துப் பிழைத்தேன்: அசோக் செல்வன்
இந்தப் படத்தில் ஆத்மிகா, ராமச்சந்திரா ராஜூ, பிரபாகர் உள்ளிட்ட பலர் விஜய் ஆண்டனியுடன் நடித்துள்ளனர். தற்போது இறுதிக்கட்டப் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது படக்குழு.
ஏப்ரலில் 'கோடியில் ஒருவன்' வெளியாகும் எனத் தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.