'கர்ணன்' தயாரிப்பாளருக்கு தனுஷ் நன்றி

'கர்ணன்' படத்தைத் திரையரங்கில் வெளியிட முடிவு செய்ததிற்கு, தயாரிப்பாளருக்கு தனுஷ் நன்றி தெரிவித்துள்ளார்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், லால், யோகி பாபு, ராஜிஷா விஜயன், லட்சுமி ப்ரியா, கெளரி கிஷன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கர்ணன்'. தாணு தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இன்று (ஜனவரி 31) காலை 'கர்ணன்' திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று சிறு டீஸர் ஒன்றை வெளியிட்டுப் படக்குழு தெரிவித்துள்ளது. ஏப்ரல் 9-ம் தேதி வெளியாகும் எனத் தெரிகிறது. இதனால், தனுஷ் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

இந்நிலையில், 'கர்ணன்' படத்தைத் திரையரங்கில் வெளியிட முடிவு எடுத்ததிற்காக தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

"'கர்ணன்' 2021- ஏப்ரலில் திரையரங்குகளில் வெளியாகிறது. சரியான நேரத்தில் மிகவும் தேவைப்படும் ஊக்கமளிக்கும் செய்தி. மிகவும் நன்றி தாணு சார். உங்களுக்கு வேறு வழிகள் இருந்த போதிலும், தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரைப்படங்கள் - திரையரங்குகளைச் சார்ந்து வாழ்வாதாரம் உள்ள அனைவரையும் பற்றிய எண்ணியதற்கு நன்றி. எனது ரசிகர்கள் சார்பாக ஒரு பெரும் நன்றி. இது அவர்களுக்கு நிறைய உதவும். அனைவரையும் நேசிப்போம். அன்னை வளர்ப்போம்!"

இவ்வாறு தனுஷ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE