ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கவுள்ள படத்தில் பிரகாஷ் ராஜ், யோகி பாபு இருவரும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.
அருண் விஜய் நடிக்கவுள்ள படத்தை இயக்கவுள்ளார் ஹரி. இந்தப் படத்துக்கான முதற்கட்டப் பணிகளில் மும்முரமாகப் பணிபுரிந்து வருகிறார். தற்போது நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டு வருகிறார்கள்.
இதில் நாயகியாக ப்ரியா பவானி சங்கர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 'மாஃபியா' படத்துக்குப் பிறகு அருண் விஜய் - ப்ரியா பவானி சங்கர் இருவரும் இணைந்து நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. இவரைத் தொடர்ந்து பிரகாஷ் ராஜ், யோகி பாபு இருவரும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.
ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்கி, ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட முடிவு செய்துள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக முடிக்கத் திட்டமிட்டு, படப்பிடிப்புக்கான இடங்களைத் தேர்வு செய்து வருகிறது படக்குழு.
» 'கே.ஜி.எஃப் 2' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு
» தனிப்பட்ட முறையிலும் தொழில்ரீதியாகவும் 2020-ம் ஆண்டு பாதிப்பை ஏற்படுத்தியது: விஷ்ணு விஷால்