'கோலமாவு கோகிலா' இந்தி ரீமேக் படப்பிடிப்பு தொடக்கம்

By செய்திப்பிரிவு

ஜான்வி கபூர் நடிப்பில் 'கோலமாவு கோகிலா' படத்தின் இந்தி ரீமேக் தொடங்கப்பட்டுள்ளது.

2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 17-ம் தேதி வெளியாகி, பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'கோலமாவு கோகிலா'. நயன்தாரா, யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன், ஆர்.எஸ்.சிவாஜி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படத்தை நெல்சன் இயக்கியிருந்தார். லைகா நிறுவனம் தயாரித்த இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைப்பாளராகப் பணிபுரிந்தார்.

இந்தப் படத்துக்குக் கிடைத்த வரவேற்பால் இதன் ரீமேக் உரிமைக்குப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. கன்னட ரீமேக் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து இந்தி ரீமேக்கும் உறுதியானது.

'கோலமாவு கோகிலா' படத்தின் இந்தி ரீமேக்கை இயக்குநர் ஆனந்த் எல்.ராய் தயாரித்து வருகிறார். இதில் நயன்தாரா கதாபாத்திரத்தில் ஜான்வி கபூர் நடிக்க, படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதனை முதல் நாள் படப்பிடிப்புத் தளத்தின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுப் படக்குழு உறுதி செய்துள்ளது.

'குட்லக் ஜெர்ரி' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் தீபக் தோப்ரியல், சுஷாந்த் சிங், நீரஜ் சூட் உள்ளிட்ட பலர் ஜான்வி கபூருடன் நடிக்கவுள்ளனர். சித்தார்த் செங்குப்தா இயக்கி வருகிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE