அருண் விஜய் - அறிவழகன் படப்பிடிப்பு நிறைவு

By செய்திப்பிரிவு

அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்து வந்த படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது.

'குற்றம் 23' படத்துக்குப் பின் அருண் விஜய் - அறிவழகன் மீண்டும் இணைந்து பணிபுரிந்து வருகிறார்கள். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத், டெல்லி உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்று வந்தது. இந்தப் படத்தை ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இதில் ரெஜினா, ஸ்டெபி படேல் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இன்னும் பெயரிடப்படாமல் உள்ள இந்தப் படத்தை 'AV31' என்று அழைத்து வந்தது படக்குழு. இதற்கு 'ஜிந்தாபாத்' மற்றும் 'பார்டர்' உள்ளிட்ட பெயர்கள் சொல்லப்பட்டாலும் இன்னும் எதுவும் இறுதி செய்யப்படவில்லை.

தற்போது ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடித்து, இறுதிக்கட்டப் பணிகளைத் தொடங்கியுள்ளது படக்குழு. இதன் படப்பிடிப்பு நிறைவடைந்ததால் படக்குழுவினர் மிகவும் நெகிழ்ச்சியடைந்துள்ளனர். இதற்கு இசையமைப்பாளராக சாம் சி.எஸ். பணிபுரிந்து வருகிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE