உருவாகிறது 'போடா போடி 2': நாயகனாக சிம்பு ஒப்பந்தம்

By செய்திப்பிரிவு

'போடா போடி 2' படத்தில் நாயகனாக நடிக்க சிம்பு ஒப்பந்தமாகியுள்ளார்.

விக்னேஷ் சிவன் இயக்குநராக அறிமுகமான படம் 'போடா போடி'. சிம்பு, வரலட்சுமி சரத்குமார், விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படத்துக்கு தரண்குமார் இசையமைத்திருந்தார். 2012-ம் ஆண்டு நவம்பர் 13-ம் தேதி இந்தப் படம் வெளியானது. இளைஞர்கள் மத்தியில் இந்தப் படத்துக்கும், பாடல்களுக்கும் பெரும் வரவேற்பு கிடைத்தது.

இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களுள் ஒருவர் பதம்குமார். ஒளிப்பதிவாளர், கதாசிரியர், திரைக்கதை ஆசிரியர் எனப் பல்வேறு தளங்களில் பணிபுரிந்து வரும் பதம்குமார், 'போடா போடி 2' படத்தைத் தயாரிக்கவுள்ளதை உறுதி செய்திருக்கிறார். இதில் புதுமுக நாயகி ரித்திகா பால் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

'போடா போடி 2' படத்தின் கதை முடிவாகிவிட்டது. ஆனால், இயக்குநர் யார் என்பது சஸ்பென்ஸ் என்கிறார்கள். இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கத் திட்டமிட்டுள்ளது படக்குழு. முதல் பாகத்தைப் போலவே, இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் வெளிநாட்டில்தான் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

தற்போது 'மாநாடு' படத்தின் கவனம் செலுத்தி வரும் சிம்பு, அடுத்ததாக ராம் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கத் தேதிகள் ஒதுக்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து 'போடா போடி 2' படத்தில் நடிப்பார் எனத் தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE