பா.இரஞ்சித் - மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் கூட்டணி உறுதி

By செய்திப்பிரிவு

பா.இரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் கூட்டணி இணைவது உறுதியாகிவிட்டது.

தனுஷ், ராஜிஷா விஜயன், லால், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கர்ணன்'. தாணு தயாரித்து வரும் இந்தப் படத்தை மாரி செல்வராஜ் இயக்கி வருகிறார். ஒட்டுமொத்தப் படப்பிடிப்பும் முடிந்து, இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது படக்குழு.

இந்நிலையில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் அடுத்த படம் முடிவாகிவிட்டது. இதில் நாயகனாக துருவ் விக்ரம் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை பா.இரஞ்சித் தயாரிக்கவுள்ளார். மாரி செல்வராஜின் முதல் படமான 'பரியேறும் பெருமாள்' படத்தைத் தயாரித்தவர் பா.இரஞ்சித் என்பது நினைவுகூரத்தக்கது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் இணையும் படத்தின் கதை, விளையாட்டை மையப்படுத்திய படம் என்று தகவல் வெளியாகியுள்ளது. 'கர்ணன்' படத்தின் பணிகள் முழுமையாக முடிவடைந்தவுடன் இந்தப் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE