அப்பாவின் உடல்நிலை சீராகவுள்ளது என்று எஸ்பிபி சரண் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 5-ம் தேதி பிரபல பாடகர் எஸ்பிபிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடல்நிலை ஆகஸ்ட் 14-ம் தேதி மோசமடைந்தது.
வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகள் மூலம் எஸ்பிபிக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் உடல்நிலை கொஞ்சம் கொஞ்சமாக சகஜ நிலைக்குத் திரும்பி வருகிறது. மருத்துவமனை அறிக்கை தவிர்த்து அவருடைய மகன் எஸ்பிபி சரணும் அவ்வப்போது தந்தையின் உடல்நிலை குறித்து ட்வீட்களும், வீடியோக்களும் வெளியிட்டு வருகிறார்.
அதன்படி, இன்று (செப்டம்பர் 16) எஸ்பிபி சரண் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
» இயக்குநர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவுக்கு கரோனா தொற்று: நலமாக இருப்பதாகக் காணொலிப் பகிர்வு
» திரையரங்குகளை விரைந்து திறக்க வேண்டும்: மத்திய அரசுக்கு மல்டிப்ளக்ஸ் கூட்டமைப்பு கோரிக்கை
"அப்பாவின் உடல்நிலை சீராக உள்ளது. ஃபிசியோதெரபி தொடர்கிறது. எக்மோ மற்றும் செயற்கை சுவாச உதவி தொடர்கிறது. ஆனால் நீண்ட நாட்களுக்கு அவை தேவைப்படாது என நம்புகிறேன். எம்ஜிஎம் ஹெல்த்கேரில் இருக்கும் மருத்துவர் குழுவுக்கும், அப்பாவுக்காகப் பிரார்த்தனை செய்யும் உங்கள் அனைவருக்கும் நன்றி"
இவ்வாறு எஸ்பிபி சரண் தெரிவித்துள்ளார்