திரையுலகினருக்கு விஷ்ணு விஷால் வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

தற்போது திரையுலகில் நிலவி வரும் சர்ச்சைகள் தொடர்பாக, திரையுலகினருக்கு விஷ்ணு விஷால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சுஷாந்த் சிங் மரணத்துக்குப் பிறகு பாலிவுட் திரையுலகில் பெரும் சர்ச்சையாகி உருவாகியுள்ளது. அவருடைய மரணம் தொடர்பாக கங்கணா ரணாவத்தின் கருத்துகள், போதை மருந்து விவகாரம் எனத் தொடர்ச்சியாகப் பல சர்ச்சைகள் வந்து கொண்டே இருக்கிறது.

அதே போல், போதை மருந்து விவகாரத்தில் நடிகை ராகினி திரிவேதி, சஞ்சனா கல்ரானி கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த விவகாரத்தில் பல்வேறு நடிகைகளின் பெயர்களும் வெளியான வண்ணமுள்ளன. இது தொடர்பாக திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக விஷ்ணு விஷால் திரையுலகினருக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில் விஷ்ணு விஷால் கூறியிருப்பதாவது:

"என் அன்பார்ந்த திரைத்துறை நண்பர்களே, ஒரு சிலரின் தன்னலமான நோக்கத்தால் தான் சில விஷயங்கள் மோசமாகச் சித்தரிக்கப்படுகின்றன. மக்கள் நாம் பேசுவதை மதிக்காத நிலைக்கு நாம் தரம் தாழ்ந்து செல்ல வேண்டாம். ஒருவரை ஒருவர் ஆதரிப்போம், துறையை வளர்ப்போம்"

இவ்வாறு விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE