சீரான, நிதானமான முன்னேற்றம்: எஸ்பிபி குறித்து எஸ்பிபி சரண்

By செய்திப்பிரிவு

சீரான, நிதானமான முன்னேற்றத்துடன் எஸ்பிபி இருப்பதாக அவரது மகன் சரண் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 5-ம் தேதி பிரபல பாடகர் எஸ்பிபிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடல்நிலை ஆகஸ்ட் 14-ம் தேதி மோசமடைந்தது.

வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகள் மூலம் எஸ்.பி.பிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனை அறிக்கை தவிர்த்து அவருடைய மகன் எஸ்பிபி சரணும் அவ்வப்போது அப்பாவின் நிலை குறித்து ட்வீட்களும், வீடியோக்களும் வெளியிட்டு வருகிறார்.

அதன்படி, இன்று (செப்டம்பர் 2) எஸ்பிபி சரண் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"இன்று அப்பாவின் உடல்நிலை குறித்த அப்டேட்: சீரான, நிதானமான முன்னேற்றத்துடன் தொடர்ந்து குணமடைந்து வருகிறார்."

இவ்வாறு எஸ்பிபி சரண் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE