பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் நேற்று ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்பதில் என்றும் உறுதியுடன் இருப்பவள் நான். அதன்படி, சுற்றுச்சூழலில் என்னால் ஏற்படக் கூடிய கார்பனின் அளவை குறைக்க முடிவு செய்தேன். எனக்கு, இறைச்சி இல்லாமல் ஒருவேளை உணவு உண்பது கூட மிகவும் கடினமான செயல். ஆனால், மன உறுதியுடன் படிப்படியாக முயற்சி செய்து எனது 45-வது வயதில் தற்போது சைவ உணவுக்கு முற்றிலுமாக மாறிவிட்டேன். இவ்வாறு ஷில்பாஷெட்டி கூறியுள்ளார்.