ஒரு முதிர்ச்சியான காதல் கதை - தனது புதிய தொடர் குறித்து ஏக்தா கபூர் பெருமிதம்

ரோனித் ராய், குர்தீப் கோலி, மோனா சிங் நடிப்பில் வெளியான தொடர் ‘கேனே கோ ஹம்ஸஃபர் ஹைன்’. இதை ஏக்தா கபூரின் பாலாஜி டெலிபிலிம்ஸ் தயாரித்திருந்தது. இத்தொடரின் மூன்றாவது சீசனை ஏக்தா கபூர் வெளியிட்டார்.

இது குறித்து ஏக்தா கபூர் கூறியுள்ளதாவது:

என் பிறந்தநாளுக்கு முந்தையை தினம் எனக்கு மிகவும் பிடித்த தொடரின் மூன்றாவது சீசனை வெளியிடுவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். ஒரு முதிர்ச்சியான காதல் கதையை சொல்லவே எப்போதும் விரும்பினேன். அந்த விருப்பம் ‘கேனே கோ ஹம்ஸஃபர் ஹைன்’ தொடரின் மூலம் நிறைவேறியுள்ளதில் மகிழ்ச்சி. இத்தொடர் நவீன கால உறவுமுறைச் சிக்கல்கள் குறித்து பேசுகிறது.

இரண்டு வெற்றிகரமான சீசன்களைத் தொடர்ந்து இந்த மூன்றாவது சீசனும் துரோகத்தின் நிழல் படிந்த உறவுகள் குறித்து அலசுகிறது. ஜீ5 மற்றும் ஆல்ட் பாலாஜி ரசிகர்களுக்கு இந்த தொடர் என் பிறந்தநாள் பரிசு.

இவ்வாறு ஏக்தா கபூர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE